கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மணிப்பூர் நிலை குறித்து ஒட்டுமொத்த இந்தியாவும் கவலையில் உள்ளது: அசோக் கெலாட்

மணிப்பூர் சம்பவம் குறித்து ஒட்டு மொத்த இந்தியாவும் மிகுந்த வேதனையில் இருப்பதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் பாஜகவை தாக்கிப் பேசியுள்ளார்.

News image
Updated On :20 ஜூலை 2023, 12:14 pm

DIN

மணிப்பூர் சம்பவம் குறித்து ஒட்டு மொத்த இந்தியாவும் மிகுந்த வேதனையில் இருப்பதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் பாஜகவை தாக்கிப் பேசியுள்ளார்.

மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் மைதேயி மற்றும் குகி இன மக்களிடையே கடுமையான வன்முறை நிலவி வருகிறது. இந்த வன்முறையில் 150-க்கும் அதிகமானோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்த வன்முறைக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வந்தனர். இந்தியா மட்டுமில்லாது வெளிநாடுகளில் இருந்தும் மணிப்பூர் வன்முறைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடாளுமன்றம் மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த நிலையில், நேற்று (ஜூலை 19) குகி இனப் பெண்கள் இருவரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் விடியோ சமூக வலைத்தளங்களில் பரவி நாட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மணிப்பூரில் பெண்களுக்கு அரங்கேறிய இந்த பாலியல் ரீதியிலான கொடுமைக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதற்கிடையில், இந்த சம்பவத்துக்கு காரணமானவரை காவல் துறை கைது செய்தது.

இந்த நிலையில், மணிப்பூர் சம்பவம் குறித்து ஒட்டு மொத்த இந்தியாவும் மிகுந்த வேதனையில் இருப்பதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் பாஜகவை தாக்கிப் பேசியுள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், மணிப்பூர் வன்முறை முடிவில்லாமல் தொடர்வது மிகுந்த வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.