மணிப்பூர் விவகாரம்: குடியரசுத் தலைவரை சந்திக்கும் இந்தியா கூட்டணி

மணிப்பூர் விவகாரம் குறித்து புகார் அளிப்பதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரெளபதி முர்மு
திரெளபதி முர்மு
Published on
Updated on
1 min read

மணிப்பூர் விவகாரம் குறித்து புகார் அளிப்பதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினா் நடத்திய போராட்டம் இனக் கலவரமாக மாறி கடந்த 2 மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது.

குகி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கிய கலவரக்காரர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்ற விடியோ நேற்று இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்திப்பதற்காக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com