மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

வங்கதேசத்தில் ஒரே நாளில் 2,292 பேருக்கு டெங்கு: 9 பேர் பலி!

வங்கதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,292 பேருக்கு டெங்கு பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :24 ஜூலை 2023, 11:55 am IST

வங்கதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,292 பேருக்கு டெங்கு பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2023-ம் ஆண்டில் ஒரே நாளில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

டெங்கு பாதித்து 9 பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார சேவைகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 

இதையடுத்து டாக்காவில் உள்ள மருத்துவமனையில் புதிதாக 1,064 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வங்கதேசம் முழுவதும், தலைநகரில் 4,149 பேர் உள்பட மொத்தம் 7,175 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்தாண்டு இதுவரை 32,977 பேர் டெங்கு பாதித்த நிலையில், 25,626 சிகிச்சை பெற்று மீண்டுள்ளனர். 

கடந்த 2022-ல் மாநிலத்தில் 281 டெங்கு இறப்புகளும், 2019-ல் 179 இறப்புகளும் பதிவானது. அதேபோன்று கடந்தாண்டு 62,423 பேரில் 61,971 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை 20,465 பாதிப்பும், 109 இறப்பும் பதிவானது. 

டெங்கு நோய் 2023-ன் மாத வாரியான தரவுகளின்படி, ஜனவரியில் 566 பேர் பாதிப்பும், 6 பேர் பலியும் பதிவானது. பிப்ரவரியில் 111 பாதிப்பும், 2 பேர் உயிரிழந்தனர். மார்ச்சில் 143 பாதிப்பும் 2 பலியும் பதிவானது. ஏப்ரலில் 50 பாதிப்பும் 2 பலியும் பதிவான நிலையில், மே மாதத்தில் 1,036 பதிப்பும் 2 பலியும் பதிவானது. ஜூன் மாதத்தில் மட்டும் 5,956 போதிப்பும், 34 பலியும் பதிவாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.