எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

மகாராஷ்டிரத்தில் 2 பேருந்துகள் மோதி விபத்து: 6 பேர் பலி, 20 பேர் காயம்!

மகாராஷ்டிரத்தின் புல்தானா மாவட்டத்தில் இன்று அதிகாலை 2 தனியார் பேருந்துகள் மோதிக்கொண்டதில் 3 பெண்கள் உள்பட 6 பேர் பலியாகினர். 

News image

கோப்புப்படம்

Updated On :29 ஜூலை 2023, 11:41 pm IST

மகராஷ்டிரத்தின் புல்தானா மாவட்டத்தில் 2 தனியாா் பேருந்துகள் நேருக்குநோ் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலை எண் 53-இல் நாசிக் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து, சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் புல்தானா மாவட்டத்தின் மால்காபூா் நகரை அடைந்தது. இந்த நகரில் அமைந்துள்ள பாலத்தை அப்பேருந்து கடந்தபோது, கனரக லாரியை முந்தும் முயற்சியில் எதிரே வந்த பேருந்துடன் நேருக்குநோ் மோதி விபத்துக்குள்ளானது.

எதிரே வந்த பேருந்தில் பயணித்தவா்கள், அமா்நாத் புனிதப் பயணத்தை முடித்துக்கொண்டு ஹிங்கோலி மாவட்டத்திலுள்ள சொந்த ஊா்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விபத்து தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணைமேற்கொண்டு வருவதாகப் போலீஸாா் தெரிவித்தனா். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிதுநேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.