ஜம்முவில் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக் கொலை!

ஜம்முவின் அர்னியா செக்டாரில் உள்ள சர்வதேச எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். 
ஜம்முவில் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக் கொலை!

ஜம்முவின் அர்னியா செக்டாரில் உள்ள சர்வதேச எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். 

நேற்றிரவு ஆர்னியா எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் இருக்கும்போது சந்தேகம் ஏற்படும் வகையில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருந்தது தெரியவந்தது. 

இந்நிலையில், சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவர் எல்லையில் ஊடுருவ முயன்றபோது, பாதுகாப்புப் படையினர் அவரை சுட்டு வீழ்த்தினர். 

மேலும், அப்பகுதியில் தொடர்ந்து தேடுல் வேட்டை நடைபெற்று வருகின்றது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com