செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கும்பாபிஷேகம் முதல் பட்டாபிஷேகம் வரை.. எந்த கோயிலில் என்ன விஷேசம்!

மே 2 வரை பல்வேறு கோயில்களில் நடைபெறும் நிகழ்வுகள்..

News image

கும்பாபிஷேகம்

Updated On :17 ஏப்ரல் 2026, 6:54 am

• கோயம்புத்தூர் மாவட்டம், சிறுமுகை அருகேயுள்ள இடுகம்பாளையம் அருள்மிகு அனுமந்தராய சுவாமி திருக்கோயிலில் ஏப்ரல் 18, சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையன்று அதிகாலை சிறப்பு அலங்காரம், தீபாராதனை, ஆன்மிகச் சொற்பொழிவு, பஜனை, வள்ளிக்கும்மி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

• திருவாரூர் மாவட்டம், திருவீழிமிழலை ஸ்ரீசுந்தர குஜாம்பிகை சமேத ஸ்ரீவீழிநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரைப்பெருவிழா ஏப்ரல் 19 முதல் 30 வரை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வுகள் : ஏப்ரல் 22 - திருமுலைப்பால், ஏப்ரல் 24 - காலசம்ஹாரம், ஏப்ரல் 29 - திருத்தேர் உற்சவம்.

• சென்னை - 64 , சிட்லபாக்கம், எம். சி. நகர் முதல் பிரதான சாலை, ஸத்குரு ஷீரடி ஸôயிபாபா மற்றும் விபூதி பாபா ஆலய கும்பாபிஷேகம் ஏப்ரல் 20, காலை 9.30 மணியளவில் நடைபெறுகிறது.

• திருவையாறு, ஸ்ரீதர்மசம்வர்த்தனியம்மன் உடனாகிய ஸ்ரீ பஞ்சநதீஸ்வரசுவாமி தேவஸ்தானத்தில் சைத்ர மகோற்சவம் ஏப்ரல் 20}ஆம் தேதி தொடங்கி, மே 4}ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சியுடன் நடைபெறுகிறது.

• வேலூர் மாவட்டம், குடியாத்தம், நல்லூர்பேட்டை அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத அருள்மிகு பாலசார்தூலீஸ்வரர் கோயிலில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 20 }ஆம் தேதி முதல் மே 3 வரை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகிறது. இதில் முக்கிய நிகழ்வுகள்: ஏப்ரல் 27, காலை 10 மணிக்கு திருத்தேர் உற்சவம், மே 1, இரவு 7 மணிக்கு புஷ்பப் பல்லக்கு.

• தஞ்சாவூர், தெற்கு ராஜவீதியில் உள்ள ஸ்ரீ பீமராஜ கோஸ்வாமிகள் சதன் வளாகத்தில் உள்ள ஸ்ரீ வீரஆஞ்சநேயர் சந்நிதி மண்டலபூஜை பூர்த்தி ஏப்ரல் 21- இல் சிறப்பு அபிஷேகம், பூஜை, ஹோமங்களுடன் நடைபெறுகிறது.

• ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகில் தக்கோலம் கிராமத்தில் உள்ள அருள்மிகு கிரிராஜ கன்னிகாம்பாள் உடனுறை ஜலநாத ஈஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் ஏப்ரல் 21}இல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய விழாக்கள்: ஏப்ரல் 27 - ரத உற்சவம், ஏப்ரல் 28 - திருக்கல்யாணம், ஏப்ரல் 30 } நடராஜர் தரிசனம், தீர்த்தவாரி.

• தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், கீழ்க்கொருக்கை அருள்தரும் புஷ்பவல்லி அம்பிகா உடனாகிய அருள்தரும் பிரம்மபுரீஸ்வர சுவாமி திருக்கோயிலில் முதலாம் ஆண்டு ஸம்வத்ஸ்ராபிஷேகம் ஏப்ரல் 22 (புதன்கிழமை) காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெறுகிறது.

• மயிலை அருள்மிகு பொற்கொடி அம்பாள் உடனுறை காரணீஸ்வரர் திருக்கோயிலின் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் ஏப்ரல் 23, காலை 6 மணியளவில் நடைபெறுகிறது. அன்று இரவு திருக்கல்யாண உற்சவமும், தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் திருவீதியுலாவும் நடைபெறும்.

• மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்ட ராமஸ்வாமி திருக்கோயில் பிரம்மோற்சவம் ஏப்ரல் 23}இல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய விழாக்கள்: ஏப்ரல் 25} கருடவாகனம், ஏப்ரல் 27 - அனுமந்த வாகனம், ஏப்ரல் 29} திருத்தேர், மே 2 - பட்டாபிஷேகம்.

• வேலூர் மாவட்டம், மேல்பாடி (வழி) வள்ளிமலை ஆசிரமத்தில் 35-ஆம் ஆண்டு வேல்மாறல் அகண்ட பாராயணம் மே 1 காலை 9 மணிக்கு தொடங்கி, தொடர்ந்து மே 2 காலை 10 மணிக்கு முடிவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.