வெளியுறவு அமைச்சகத்தின் தலைமையகத்தில் தீ விபத்து!

தில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் தலைமையகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
வெளியுறவு அமைச்சகத்தின் தலைமையகத்தில் தீ விபத்து!

தில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் தலைமையகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

தில்லி ஜவஹர்லால் நேரு பவனில் இன்று காலை 10:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் தரை தளத்தில் இருந்து பரவிய தீயானது, மேல் தளங்களுக்கும் பரவி விபத்து ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதும் வெளியாகவில்லை.

இருப்பினும், தீ விபத்தால் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்துக்கான காரணத்தை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஜவஹர்லால் நேரு பவன் தில்லியின் அமைந்துள்ள அரசு அலுவலக கட்டிடம். இந்த கட்டிடத்தில் வெளியுறவு அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் உள்பட பல அரசு துறைகளின் அலுவலகங்கள் உள்ளன.

கூடிய விரைவில் கட்டிடத்தை சீரமைத்து தருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், மறுகட்டமைப்பு செய்ய எவ்வளவு காலம் எடுக்கும் என்பது குறித்து தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com