தொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

ஜூன் 20ல் அமெரிக்கா, எகிப்துக்குச் செல்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 20 முதல் 25ம் தேதி வரை 5 நாள் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்துக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளி விவகார அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:38 am IST

பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 20 முதல் 25ம் தேதி வரை 5 நாள் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்துக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளி விவகார அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. 

அமெரிக்காவிற்கு மோடியின் வருகை நியூயார்க்கில் தொடங்கவுள்ளது. ஜூன் 21 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். 

பின்னர், வாஷிங்டன் செல்லும் அவர் ஜூன் 22 அன்று வெள்ளை மாளிகைக்குச் சென்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து உரையாட உள்ளார். அதன்பின்னர், அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

ஜூன் 23-ல் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பில்ன்கள் ஆகியோருடன் மதிய உணவில் கலந்துகொள்கிறார். 

ஜூன் 24, 25ல் எகிப்துக்கு வருகை தருகிறார் பிரதமர் மோடி. அங்கு அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசியை சந்திக்கிறார். பிரதமராக எகிப்துக்கு மோடியின் முதல் வருகை இதுவாகும். பின்னர் எகிப்திய அரசைச் சேர்ந்த மூத்த தலைவர்களுடன் அவர் சந்தித்துப் பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.