பாஜக தலைவர்களில் ஒருவரும், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முன்னாள் மல்யுத்த வீராங்கனையுமான பபிதா போகத் தங்களது தேவைக்காக மல்யுத்த வீரர்களை பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதாக சாக்ஷி மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.
மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை பபிதா போகத் வலுவிழக்க செய்ய முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சாக்ஷி மாலிக் மற்றும் அவரது கணவர் சத்யவர்த் கதியன் இது தொடர்பாக நேற்று (ஜூன் 17) ட்விட்டரில் விடியோ ஒன்றை வெளியிட்டனர். அந்த விடியோவில் சாக்ஷி மாலிக் மற்றும் அவரது கணவர் சத்யவர்த் கதியன், மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு ஆரம்பத்தில் கடிதம் எழுதியதே பாஜகவைச் சேர்ந்தவர்களான பபிதா போகத் மற்றும் தீரத் ராணா ஆகியோர் எனக் குறிப்பிட்டனர். அதன்பின் இந்த போராட்டம் அரசியல் கட்சியினரால் பயன்படுத்திக் கொள்ளப்படக் கூடாது எனவும் அவர்கள் அறிவுரை கூறியதாகவும் அவர்கள் கூறினர். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அவர்களால் எழுதப்பட்ட கடிதத்தையும் சாக்ஷி மாலிக் மற்றும் அவரது கணவர் காட்டினர்.
இந்த நிலையில், பாஜக தலைவர்களில் ஒருவரும், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முன்னாள் மல்யுத்த வீராங்கனையுமான பபிதா போகத் தங்களது தேவைக்காக மல்யுத்த வீரர்களை பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதாக சாக்ஷி மாலிக் குற்றம்சாட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது: தீரத் ராணா மற்றும் பபிதா போகத் ஆகிய இருவரும் மல்யுத்த வீரர்களை தங்களது சுயநலத்துக்காக பயன்படுத்த முயற்சி செய்தது எங்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மல்யுத்த வீரர்கள் தற்போது பிரச்னையில் இருக்கிறோம். நாங்கள் கண்டிப்பாக பிரச்னையில் இருக்கிறோம். எங்களுக்கு அதிகாரம் படைத்தவர்களால் நடத்தப்படும் கேலிக்கூத்துகளை நினைத்து சிரிக்க கூட முடியவில்லை எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
தில்லியில் 60 ஐஏஎஸ், டானிக்ஸ் அதிகாரிகள் இடமாற்றம்

போதைப்பொருள் ஒழிப்பு தினம்: இருசக்கர வாகன விழிப்புணா்வு பேரணி

அவசரநிலை கால அத்துமீறல்கள்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவுரை
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



