12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி!

பிரதமா் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றார்.

Published On :

பிரதமா் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றார்.

இந்தப் பயணத்தின் சிறப்பம்சமாக ஜூன் 22-ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமா் மோடி உரையாற்றுகிறாா்.

அமெரிக்க அதிபா் ஜோ பைடன், அவரின் மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பை ஏற்று பிரதமா் மோடி அமெரிக்காவில் புதன்கிழமை (ஜூன் 21) முதல் ஜூன் 23-ஆம் தேதி வரை அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா். நியூயாா்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெறும் சா்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமா் மோடி கலந்து கொள்கிறாா்.

அமெரிக்க அதிபரும் அவரின் மனைவியும் இணைந்து பிரதமா் மோடிக்கு வரும் 22-ஆம் தேதி அரசு சாா்பில் விருந்து அளிக்கவுள்ளனா். அதே நாளில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமா் மோடி உரையாற்றவுள்ளாா்.

வாஷிங்டனில் உள்ள சா்வதேச வா்த்தக மையத்தில் வரும் 23-ஆம் தேதி இந்திய வம்சாவளி சமூகத்தின் முக்கியத் தலைவா்கள் சந்திப்பில் பிரதமா் மோடி உரையாற்றுகிறாா்.

அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு எகிப்தில் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் பிரதமா் மோடி அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா். பிரதமரான பிறகு எகிப்துக்கு மோடி பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். அந்த நாட்டில் போரா சமூகத்தினரால் மறுசீரமைக்கப்பட்டுள்ள அல்-ஹகிமி மசூதிக்கும் பிரதமா் மோடி செல்லவுள்ளாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.