விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ரயில் வருகையை அறிவிக்காத ஊழியர்கள்.. பயணிகள் பரிதவிப்பு

ரயிலின் வருகையில் ஏற்பட்ட மாற்றத்தை ரயில் நிலைய ஊழியர்கள் அறிவிக்காததால், ரயில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

News image
Updated On :26 ஜூன் 2023, 6:36 am


கலபுரகி: ரயிலின் வருகையில் ஏற்பட்ட மாற்றத்தை ரயில் நிலைய ஊழியர்கள் அறிவிக்காததால், ரயில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

கலபுரகி ரயில் நிலையத்தில், செகுந்தராபாத் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்த பயணிகள், வழக்கமாக அந்த ரயில் வரும் நடைமேடை ஒன்றில் காத்திருந்தனர்.

ரயில் வரும் நேரம் ஆன பிறகும், ரயில் வராத நிலையில், அந்த ரயில் மற்றொரு நடைமேடை வழியாக சென்றுவிட்டதாக தகவல் கிடைத்ததால், முன்பதிவு செய்தும் ரயிலில் ஏற முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகினர்.

இதில், ரயில் குறித்து அறிவிக்க மறந்தது எங்கள் தவறுதான் என்று ரயில்வே அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

இது குறித்து பயணிகள் கூறுகையில், காலை 5.45 மணிக்கு முதல் நடைமேடையில் விரைவு ரயில் வர வேண்டும். ரயில்களின் முன்னறிவிப்புப் பலகையில், நடைமேடை குறித்த அறிவிப்பு இல்லாமல் ரயிலின் பெயர் மட்டும் இருந்தது. பிறகு, ரயில் வரும் நேரம் 6.30க்கு மாற்றப்பட்டது. அப்போதும் நடைமேடை குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. பிறகு, 6.45 மணிக்கு, அறிவிப்புப் பலகையிலிருந்து ரயிலின் பெயர் அகற்றப்பட்டது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் பயணிகள் கேட்டபோது, அந்த ரயில் இரண்டாம் நடைமேடை வழியாக சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

அப்போதுதான் ரயில்வே ஊழியர்களுக்கு, நடைமேடை மாற்றம் குறித்து அறிவிக்காமல் விட்டுவிட்டது தெரிய வந்தது. உடனடியாக மாற்று ரயிலில் அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.