27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ராகுலின் பிடிவாதத்தால் ஒரு உயிர் போய்விட்டது: பாஜக குற்றச்சாட்டு!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிடிவாதத்தால் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

News image
Updated On :29 ஜூன் 2023, 6:14 pm IST

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிடிவாதத்தால் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

மணிப்பூர் விவகாரத்தில் ராகுல் காந்தி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாஜக தலைமையகத்தில் பேசிய பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது: மணிப்பூரில் சூரன்சந்த்பூர் பகுதியில் நிலவும் பதற்ற நிலையைக் கருத்தில் கொண்டு உள்ளூர் நிர்வாகம் ராகுல் காந்தியை ஹெலிகாப்டர் மூலம் கலவரத்தால் பாதித்த இடங்களை பார்வையிட அறிவுறுத்தியது. ஆனால், அவர் அதனை மறுத்து சாலை வழியாக கலவரத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட போவதாக தெரிவித்தார். இந்த அளவுக்கு ராகுல் காந்தி மணிப்பூர் விவகாரத்தில் பிடிவாதம் காட்டியிருக்க கூடாது. இது சரியான முடிவு அல்ல. பிடிவாதத்தை விட சூழ்நிலையின் தீவிரம்தான் மிகவும் முக்கியம். ராகுல் காந்தியின் இந்த செயல்பாடு அவரது அதிப்படியான பொறுப்பற்ற செயல்பாட்டைக் காட்டுகிறது.

ராகுல் மற்றும் பொறுப்புணர்ச்சி இரண்டும் ஒருபோதும் ஒன்றாக இருக்கவே முடியாது. அதனை இன்று அவர் மீண்டும் நிரூபித்துள்ளார். கடந்த ஜூன் 13 ஆம் தேதி முதல் மணிப்பூரில் வன்முறையால் ஒரு உயிரிழப்பும் பதிவாகவில்லை. ஆனால்,  சோகத்தை ஏற்படுத்தும் விதமாக இன்று மணிப்பூரில் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. நான் கையெடுத்துக் கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன். மணிப்பூர் கலவரம் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இந்த தருணத்தில் அரசியல் ஆதாயத்துக்காக நாம் சண்டையிட்டுக் கொள்ள கூடாது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.