சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ராகுலின் பிடிவாதத்தால் ஒரு உயிர் போய்விட்டது: பாஜக குற்றச்சாட்டு!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிடிவாதத்தால் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:44 am IST

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிடிவாதத்தால் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

மணிப்பூர் விவகாரத்தில் ராகுல் காந்தி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாஜக தலைமையகத்தில் பேசிய பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது: மணிப்பூரில் சூரன்சந்த்பூர் பகுதியில் நிலவும் பதற்ற நிலையைக் கருத்தில் கொண்டு உள்ளூர் நிர்வாகம் ராகுல் காந்தியை ஹெலிகாப்டர் மூலம் கலவரத்தால் பாதித்த இடங்களை பார்வையிட அறிவுறுத்தியது. ஆனால், அவர் அதனை மறுத்து சாலை வழியாக கலவரத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட போவதாக தெரிவித்தார். இந்த அளவுக்கு ராகுல் காந்தி மணிப்பூர் விவகாரத்தில் பிடிவாதம் காட்டியிருக்க கூடாது. இது சரியான முடிவு அல்ல. பிடிவாதத்தை விட சூழ்நிலையின் தீவிரம்தான் மிகவும் முக்கியம். ராகுல் காந்தியின் இந்த செயல்பாடு அவரது அதிப்படியான பொறுப்பற்ற செயல்பாட்டைக் காட்டுகிறது.

ராகுல் மற்றும் பொறுப்புணர்ச்சி இரண்டும் ஒருபோதும் ஒன்றாக இருக்கவே முடியாது. அதனை இன்று அவர் மீண்டும் நிரூபித்துள்ளார். கடந்த ஜூன் 13 ஆம் தேதி முதல் மணிப்பூரில் வன்முறையால் ஒரு உயிரிழப்பும் பதிவாகவில்லை. ஆனால்,  சோகத்தை ஏற்படுத்தும் விதமாக இன்று மணிப்பூரில் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. நான் கையெடுத்துக் கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன். மணிப்பூர் கலவரம் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இந்த தருணத்தில் அரசியல் ஆதாயத்துக்காக நாம் சண்டையிட்டுக் கொள்ள கூடாது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.