இந்த மூன்று அணிகளால் இறுதியில் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்துவிடும்: கிறிஸ் கெயில்

இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகள் அதிக அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது இறுதியில் அந்த கிரிக்கெட்டையே அழித்துவிடும்.
இந்த மூன்று அணிகளால் இறுதியில் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்துவிடும்: கிறிஸ் கெயில்
Published on
Updated on
1 min read

இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகள் அதிக அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது இறுதியில் அந்த கிரிக்கெட்டையே அழித்துவிடும் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் போன்ற சிறிய அணிகள் சிறப்பாக விளையாடுவதற்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பெரிய அணிகளுக்கு கொடுப்பதுபோல் அதிக அளவில் ஊதியம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மூத்த வீரர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெறும் நிகழ்வில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார். 

அப்போது அவர் பேசியதாவது: இத்தனை ஆண்டுகளில் கிரிக்கெட் சிறிது மாறிவிட்டது. கிரிக்கெட் தற்போது மிகப் பெரிய தொழிலாக உருவெடுத்துள்ளது. டி20 போட்டிகளில் மட்டுமல்லாது டெஸ்ட் போட்டிகளுக்கும் அதிக அளவிலான பணம் செலவிடப்படுகிறது. சிறிய அணிகளைக் காட்டிலும் பெரிய அணிகளுக்கு அதிக அளவிலான ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால், சிறிய அணிகள் பாதிக்கப்படுகின்றன. இந்தக் குறைகளை களைய சரியான வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் அனைவரும் பயனடைவர். சிறிய அணிகள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள அதிக அளவிலான போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. பெரிய அணிகளில் உள்ள வீரர்களுக்கு உள்ள சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகள் சிறிய அணிகளுக்கும் கிடைக்க வேண்டும். பெரிய அணிகளில் உள்ள வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைப் போன்று மற்ற அணி வீரர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் சில பெரிய அணிகள் மட்டுமே கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும். அதில் அர்த்தமே இல்லை. அது விளையாட்டை அழித்துவிடும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com