வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

திகார் சிறையில் மணீஷ் சிசோடியாவின் கோரிக்கைகள்! எதற்கெல்லாம் அனுமதி?

தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதையடுத்து அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 6:40 am

DIN

தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதையடுத்து அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

தில்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) பிப். 26 ஆம் தேதி கைது செய்தது. 

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரது சிபிஐ காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. 

இன்றும் தில்லி சிபிஐ ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மார்ச் 20 வரை மணீஷ் சிசோடியாவுக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மணீஷ் சிசோடியாவின் கோரிக்கையை ஏற்று, மருத்துவப் பரிசோதனையின்போது பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுடன் கீதை புத்தகம், ஒரு பேனா, ஒரு டைரி, கண் கண்ணாடி ஆகியவற்றை சிறைக்குள் பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

மேலும், தன்னை தியான அறையில் வைக்க வேண்டும் என்ற சிசோடியாவின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.