பாரமுல்லா: ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டதில் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேரை பாரமுல்லா போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து பாரமுல்லா போலீசார் தெரிவித்துள்ளதாவது:
பாரமுல்லா மாவட்டத்தின் குன்ஸர் கிராமப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, தடை செய்யப்பட்ட பயங்கவாத அமைப்பான லஷ்கர்-ஏ-தொய்பாவைச் (டிஆர்எஃப்) சேர்ந்த குர்ஷித் அகமது கான் மற்றும் ரியாஸ் அகமது கான் ஆகியோரை கைது செய்தனர்.
இதையும் படிக்க | இந்தியாவின் ஜனநாயகத்தை அவமதிக்க ராகுல் முயற்சி: பாஜக பதிலடி
மேலும், அவர்களிடம் இருந்து 2 ஏகே 47 ரக துப்பாகிகள், அதில் பயன்படுத்தப்படும் 15 தோட்டாக்கள், 20 லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் சுவரொட்டிகள் மற்றும் பிற பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், அவர்கள் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-ஏ-தொய்பா (டிஆர்எஃப்) கூட்டாளிகளாக செயல்படுவது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர்கள் மீது குன்ஸர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என பாரமுல்லா போலீசார் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


