ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான டிஆர்எஃப் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள கத்தோஹலன் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அங்கு சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, வீரர்கள் மீது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதையும் படிக்க | ஆள்கடத்தல் விவகாரம்: என்ஐஏ சோதனையில் 44 பேர் கைது!
இதையடுத்து நமது வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இதில், இதுவரை ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாகவும், அவர் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான டிஆர்எஃப் அமைப்புடன் தொடர்புடையவர் என காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
அவரிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
இது குறித்த முழுமையானத் தகவல் விரைவில் தெரிவிக்கப்படும் என காஷ்மீர் மண்டல காவல்துறை எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


