லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்காசட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தெலங்கானா மாநில போராட்டத்தின்போது ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு ப.சிதம்பரம் வருத்தம்!

தெலங்கானா மாநில உருவாக்கத்திற்கான போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு வருத்தம் தெரிவித்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்

News image
ப. சிதம்பரம்
Updated On :17 நவம்பர் 2023, 6:17 am

DIN

தெலங்கானா மாநில உருவாக்கத்திற்கான போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு வருத்தம் தெரிவித்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தெலுங்கானா மாநிலம் அமைப்பதை தாமதப்படுத்தியதால் உயிர் இழப்புகள் ஏற்பட்டதாக கூறிய முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் குற்றம் சாட்டியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசியதாவது, “ஒரு மாநிலத்தை உருவாக்குவது அல்லது பிரிப்பது என்பது குழந்தை விளையாட்டு அல்ல. பெரும் வற்புறுத்தலுக்குப் பிறகுதான் ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரிக்க காங்கிரஸ் ஒப்புக்கொண்டது.

அதற்கான மக்கள் போராட்டத்தில் சிலர் உயிரிழந்தார்கள். அப்போது ஏற்பட்ட உயிரிழப்புக்கு நாங்கள் வருந்துகிறோம். ஆனால் அதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை பொறுப்பாக்க முடியாது.

போராட்டத்தின்போது நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கு நாங்கள் பொறுப்பெனில், கே.சந்திரசேகர ராவ் ஆட்சியின் கீழ் 4,000 தற்கொலைகள் தெலங்கானாவில் பதிவாகியுள்ளன. இந்த 4,000 பேரின் உயிரிழப்புக்கு யார் பொறுப்பாவார்?” என்று கேள்வி எழுப்பினார்.

அதையடுத்து பாரத ராஷ்டிர சமிதியின் செயல் தலைவரான ராமராவ் கூறியதாவது, “சிதம்பரத்தின் வருத்தம் மிகவும் தாமதமானது. 1952 ஆம் ஆண்டு முதல் 2014 வரையில் நடந்த போராட்டங்களில் தெலங்கானா இளைஞர்கள் உயிரிழந்ததற்கு உங்களின் காங்கிரஸ் கட்சி மட்டுமே பொறுப்பாகும். 

காங்கிரஸ் அரசு எவ்வளவு கொடூரமாக போராட்டங்களை ஒடுக்கியது என்பதை தெலங்கானா மக்கள் என்றென்றும் நினைவில் வைத்திருப்பார்கள். நீங்கள் இப்போது எவ்வளவு கடுமையாக முயற்சி செய்தாலும் அதனை மாற்ற முடியாது.” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.