அனுமதியின்றி பாலத்தை திறந்து வைத்ததாக மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே மீது மும்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பை நகரின் லோயர் பரேல் பகுதியில் உள்ள பாலத்தின் ஒரு பகுதியை மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே உள்ளிட்டோர் வியாழன் இரவு திறந்துவைத்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, இரண்டு வாரங்களுக்கு முன்பு பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததாகவும், ஆனால் அதைத் திறந்து வைக்க மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நேரமில்லாததால் அது பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை என்றும் ஆதித்ய தாக்கரே குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிக்க: பின்சுழலும் சக்கரம்! ரஷியாவில் கருக்கலைப்புக்கு நெருக்கடி!
இந்த நிலையில் குடிமை அமைப்பின் அனுமதியின்றி பாலத்தை திறந்து வைத்ததாக ஆதித்ய தாக்கரே மீது பிரஹன்மும்பை நகராட்சி அதிகாரி மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஆதித்ய தாக்கரே உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த பாலம் ஆதித்ய தாக்கரேவின் வோர்லி தொகுதியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


