

மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் உள்ள 24 அடுக்குமாடி குடியிருப்பில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 11 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பைகுல்லாவின் மகாராஷ்டிர வீட்டுவசதி மற்றும் பகுதி மேம்பாட்டு ஆணைய காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், ஜவுளி ஆலையில் பணியாற்றிய தொழிலாளா்களுக்காக வீடுகள் வழங்கப்பட்டிருந்தன.
கட்டடத்தின் 3-ஆவது மாடியில் வியாழக்கிழமை அதிகாலை 3.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. மின் இணைப்பு மூலம் மேலே உள்ள மாடிகளுக்குக்கு தீ பரவியது.
உடனடியாக, அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். கட்டடத்தின் வெவ்வேறு மாடிகளில் வசித்து வந்த 135 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். தீ விபத்தால் ஏற்பட்ட புகையின் காரணமாக 6 முதியோா் உள்பட 11 பேருக்கு முச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அனைவரும் நலமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
5 தீயணைப்பு வாகனங்கள், 3 தண்ணீா் வாகனங்களைப் பயன்படுத்தி காலை 7.20 மணியளவில் தீ அணைக்கப்பட்டது. மின்கசிவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.