லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கேசிஆரின் வாக்குறுதிகள் காலாவதியானது, இது காங்கிரஸுக்கான நேரம்!

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மாநில மக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டதாகவும், அவரது வாக்குறுதிகள் காலவதியாகிவிட்டதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. 

ஜெய்ராம் ரமேஷ் (கோப்புப் படம்)

Published On :2 பிப்ரவரி 2024, 8:56 am IST

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மாநில மக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டதாகவும், அவரது வாக்குறுதிகள் காலவதியாகிவிட்டதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. 

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், 

தெலங்கானா மாநிலம் மாநிலத்தின் அனைத்து பகுதிகள் மற்றும் மாவட்டங்களில் வளர்ச்சியைக் கொண்டுவர உருவாக்கப்பட்டது. ஆனால் ஹைதராபாத்தைத் தாண்டி மாநிலம் எந்த வளர்ச்சியும் காணவில்லை. 

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டிலேயே இளைஞர்கள் வேலையின்மை விகிதம் தெலங்கானத்தில் அதிகரித்துள்ளது என்றும், கான்ஸ்டபிள்களைத் தவிர தெலங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆள்சேர்ப்பு எதுவும் நடைபெறவில்லை என்றார்.

மாநிலத்தில் தலித்துகள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் சிறுபான்மையினருக்கு ஆட்சியில் பங்கு வழங்க வேண்டும். 9 ஆண்டுகளாக, மாநிலத்தில் கேசிஆர், அவரது மகன், மகள் மற்றும் மருமகன் ஆகியோரால் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

கே.சி.ஆரின் வாக்குறுதிகள் அனைத்தும் காலாவதியாகிவிட்டதாகவும் இது காங்கிரஸுக்கான நேரம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிஆர்எஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க முயற்சித்து வரும் நிலையில், தென் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் முயற்சிக்கிறது.

தெலங்கானாவில் நவம்பர் 30-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டிசம்பர் 3-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.