எம்எல்ஏக்களின் ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட்டார் மம்தா

மேற்கு வங்க மாநில எம்எல்ஏக்களின் மாத ஊதியம் ரூ.40 ஆயிரம் அதிகரித்து வழங்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


கொல்கத்தா: மேற்கு வங்க மாநில எம்எல்ஏக்களின் மாத ஊதியம் ரூ.40 ஆயிரம் அதிகரித்து வழங்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநில பேரவையில் இன்று இந்த அறிவிப்பினை வெளியிட்ட மம்தா பானர்ஜி, முதல்வரின் ஊதியத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், வெகுகாலமாக மம்தா பானர்ஜி, முதல்வருக்கான ஊதியம் எதையும் பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர மாநிலங்களோடு ஒப்பிடுகையில், மேற்கு வங்க மாநில எம்எல்ஏக்களின் ஊதியம் மிகவும் குறைவு. எனவேதான், அவர்களது ஊதியத்துடன் 40 ஆயிரத்தை அதிகரித்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மம்தா தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com