தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ஹிந்தியில் பேசினால் எனக்குப் புரியாது: பாஜக எம்.பி.க்களுக்கு கனிமொழி பதிலடி

மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் கூச்சலிட்டபோது 'ஹிந்தியில் பேசினால் எனக்குப் புரியாது' என்று திமுக எம்.பி. கனிமொழி கூறினார். 

News image
Updated On :20 செப்டம்பர் 2023, 12:39 pm IST

மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் கூச்சலிட்டபோது 'ஹிந்தியில் பேசினால் எனக்குப் புரியாது' என்று திமுக எம்.பி. கனிமொழி கூறினார். 

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் நேற்று(செப். 19) மக்களவையில் களிர் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார். தொடர்ந்து இன்று மசோதா மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

மசோதா மீது திமுக எம்.பி. கனிமொழி பேசத் தொடங்கியபோது பாஜக எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். 

அப்போது கனிமொழி, 'நான் இன்னும் பேசவே தொடங்கவில்லை. இப்படி நீங்கள் ஹிந்தியில் கூச்சலிட்டால் எனக்கு புரியாது, ஹிந்தியில் பேசினால் எனக்குப் புரியாது, அப்புறம் ஏன் பேசுகிறீர்கள்' என்றார். 

உடனே அருகில் இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கனிமொழிக்கு ஆதரவாக அவைத்தலைவரிடம் 'அவர் இன்னும் பேசவே தொடங்கவில்லை. இதுதான் பாஜகவினர் பெண்களுக்கு கொடுக்கும் மரியாதையா?' என்று கேள்வி எழுப்பினர். 

முன்னதாக, மகளிர் இட ஒதுக்கீட்டை உடனே செயல்படுத்தும் வகையில், மசோதாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வரக் கோரி மக்களவையில் திமுக எம்.பி கனிமொழி இன்று நோட்டீஸ் கொடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.