
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வியாழக்கிழமை காலை ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றடைந்தார்.
துபையில் அடுத்த 2 நாள்கள் தங்கியிருக்கும் பானர்ஜி, வணிக உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். மேலும் அங்குள்ள என்ஆர்ஐ குழுவையும் அவர் சந்திக்க உள்ளார்.
படிக்க: 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
மாநிலத்தில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகளில் பானர்ஜி செப்.12 அன்று ஸ்பெயினுக்குப் புறப்பட்டார். அவர் ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் மற்றும் பார்சிலோனாவுக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...