தொடரும் அமளி! நாடாளுமன்றம் 4-வது நாளாக முடங்கியது! நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடிகிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

மக்களவைத் தேர்தல் எதிரொலி: ஹெலிகாப்டர்களுக்கு மவுசு

மக்களவைத் தேர்தல் எதிரொலியாக ஹெலிகாப்டர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

News image

US National Guard helicopter crashes near Mexico border; 2 killed

Updated On :2 ஏப்ரல் 2024, 5:54 pm IST

லக்னௌ: மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் 19 முதல் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், நாடு முழுவதும் ஹெலிகாப்டர் சேவைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட கிட்டத்தட்ட 65 நாள்கள் இருக்கும் நிலையில், பல்வேறு தேசிய கட்சிகளும் தங்களது தலைவர்களின் பயணத்துக்காக ஹெலிகாப்டர்களை முன்பதிவு செய்து வருகின்றன.

கடந்த மக்களவைத் தேர்தலில், பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது தலைவர்களின் வான்வழிப் பயணத்துக்காக மட்டும் ரூ.400 கோடியை செலவிட்டிருந்தன.

ஆனால், இந்த ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே, ஹெலிகாப்டர் மற்றும் விமானங்களின் முன்பதிவு அதிகரிக்க ஆரம்பித்துவிட்டதாம்.

வெகு தொலைவிலிருக்கும் மாநிலங்களுக்கும், ஒரே நாளில் வெவ்வேறு மாநிலங்களுக்குச் செல்ல வேண்டியபோதிலும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சார்ட்டர்ட் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள், ஒரு சில மணி நேரங்களுக்கு என்ற அடிப்படையில்தான் முன்பதிவு செய்யப்படுகின்றன. ஒரு மணி நேரத்துக்கு ரூ.4.5 லட்சம் முதல் ரு.5.3 லட்சம் என விமானத்தின் வகைக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறதாம். அதிக தேவை இருக்கும்போது, ஹெலிகாப்டர்கள் ஒரு மணி நேரத்துக்கு ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம்.

உத்தரப்பிரதேசத்தில், பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களது தலைவர்களின் பயணத்துக்கு ஹெலிகாப்டர்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.