அரசியலுக்கு வருவது மகிழ்ச்சியளிப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பெர்ஹாம்பூர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் போட்டியிடுகிறார். முர்ஷிதாபாத்தில் இன்று நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், விளையாட்டுத் துறையில் இருந்து அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
மக்களிடம் பேசி வருகிறேன். இனி மக்களின் பிரச்னைகளைத் தீர்த்து அவர்களுக்குச் சேவை செய்ய முடியும். இது எனக்கு நல்ல உணர்வைத் தருகிறது. இங்கு நான் பெற்ற அன்பு, அப்படியே இருக்கும் என்று நம்புகிறேன். மக்கள் பார்வையில் பார்க்கும் போது, அவர்கள் மாற்றத்தை நாடுகிறார்கள் என்று தெரிகிறது.
இவை அனைத்தும் அவர்களுக்காக உழைக்கத் தூண்டுகிறது. அரசியலில் இளைஞர்களின் நேர்மறையான ஈடுபாட்டைப் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள், மேலும் அவர்களுக்காக வேலை செய்யக்கூடிய ஒருவரை அவர்கள் தேடுகிறார்கள் என்றார்.
மேற்கு வங்க மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது.