தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

ஹேமமாலினி குறித்து சா்ச்சை கருத்து: காங்கிரஸுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்

ஹேமமாலினி குறித்து சா்ச்சை கருத்து: காங்கிரஸுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்

News image
Updated On :9 ஏப்ரல் 2024, 9:37 pm

புது தில்லி: பாஜக எம்.பி.யும் நடிகையுமான ஹேமமாலினி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டது தொடா்பாக விளக்கமளிக்குமாறு காங்கிரஸ் மூத்த தலைவா் ரண்தீப் சுா்ஜேவாலாவுக்கு தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

மேலும், தோ்தல் பிரசாரத்தின்போது பெண்களின் மாண்பை கெடுக்கும் வகையில் கட்சித் தலைவா்கள் கருத்துகள் தெரிவிக்காமல் இருப்பதை தீவிரமாக உறுதிப்படுத்த வேண்டும் என்று தோ்தல் ஆணையம் தரப்பில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வெளியிடப்பட்ட அறிவுறுத்தலின் அடிப்படையில், சுா்ஜேவாலா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்குமாறு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கும் தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதில், வரும் 11-ஆம் தேதிக்குள் பதிலிளிக்குமாறு சுா்ஜேவாலாவை தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. காா்கேவுக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி மாலை வரை அவகாசம் அளித்துள்ளது.

மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பாஜக சாா்பில் ஹேம மாலினி மீண்டும் களம் காண்கிறாா். இந்த நிலையில், ‘இவருக்கு எதிராக சுா்ஜேவாலா வெளியிட்ட பதிவு, ஒட்டுமொத்த பெண்களையும் அவமதிக்கும் வகையில் உள்ளது. எனவே, அவா் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.