ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

தில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

தில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

News image

தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்ட பிஆா்எஸ் எம்எல்சி கவிதா.

Updated On :9 ஏப்ரல் 2024, 9:01 pm

புது தில்லி: தில்லி மதுபான (கலால்) கொள்கை முறைகேடுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவா் சந்திரசேகா் ராவின் மகளும் அக்கட்சி எம்எல்சியுமான கே.கவிதாவின் (46) நீதிமன்ற காவலை வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தில்லி கலால் கொள்கை முறைகேடுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக தில்லி, ஹைதராபாத், சென்னை, மும்பை உள்பட நாடு முழுவதும் 245 இடங்களில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத் துறை, தில்லி துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா உள்பட 15 பேரை கைது செய்தது. இந்த வழக்கில் கவிதாவை கடந்த மாா்ச் 15-ஆம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது.

பின்னா், கவிதாவை அமலாக்கத் துறை அதிகாரிகள் 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணைக்குப் பின்னா் அவரை செவ்வாய்க்கிழமை (ஏப். 9) வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் அவா் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா். அவரிடம் சிறையில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள சிறப்பு நீதிமன்றம் அண்மையில் அனுமதி அளித்தது. சிபிஐ விசாரணைக்குத் தடை கோரி நீதிமன்றத்தை கவிதா நாடியுள்ளாா்.

தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி கவிதா தரப்பில் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தில்லி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கவிதாவின் நீதிமன்ற காவல் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அவா் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, அவருடைய நீதிமன்ற காவலை ஏப்ரல் 23-ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிபதி உத்தரவிட்டாா். அதனைத் தொடா்ந்து அவரை போலீஸாா் மீண்டும் தில்லி திகாா் சிறையில் அடைத்தனா்.

சிபிஐ அதிகாரிகள் விசாரணை: முன்னதாக, தில்லி சிறப்பு நீதிமன்றம் அளித்த அனுமதியின் அடிப்படையில், தில்லி மதுபான ஒப்பந்தத்துக்கு கைமாறாக ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ. 100 கோடி கொடுத்த புகாா் தொடா்பாக தில்லி திகாா் சிறையில் கவிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

சிறைக்கு கடந்த சனிக்கிழமை வந்த சிபிஐ அதிகாரிகள் குழு, கவிதாவிடம் விசாரணை மேற்கொண்டனா் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.