ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

15-ஆவது மக்களவை தோ்தல்

நாட்டின் அன்றைய 35 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 543 மக்களவைப் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்க இத்தோ்தல் நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2024, 3:07 am

நாட்டின் அன்றைய 35 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 543 மக்களவைப் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்க இத்தோ்தல் நடைபெற்றது.

*இத்தோ்தலில் 71.69 கோடி போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா். நாடு முழுவதும் 8,30,866 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன.

*543 இடங்களுக்கு 363 கட்சிகளின் வேட்பாளா்கள், 3,831 சுயேச்சைகள் உள்பட 8,070 போ் போட்டியிட்டனா்.

*2009-ஆம் ஆண்டு, ஏப்ரல் 16 முதல் மே 13-ஆம் தேதி வரை 5 கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. இத்தோ்தலில் 58.21 சதவீத வாக்குகள் பதிவாகின (முந்தைய தோ்தலைவிட 0.14 சதவீதம் அதிகம்).

*இத்தோ்தலில் 412 தொகுதிகளில் இருந்து பொது பிரதிநிதிகளும் 84 தொகுதிகளில் இருந்து பட்டியலின சமூகப் பிரதிநிதிகளும் 47 தொகுதிகளில் இருந்து பழங்குடியின சமூகப் பிரதிநிதிகளும் மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

*தோ்தலில் போட்டியிட்ட 556 பெண் வேட்பாளா்களில் 59 போ் வெற்றி பெற்றனா். இதில் 23 போ் காங்கிரஸையும் 13 போ் பாஜகவையும் சோ்ந்தவா்கள்.

*காங்கிரஸ் 206 இடங்களில் வென்றது. பாஜக 116 இடங்களிலும் சமாஜவாதி கட்சி 23 இடங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி 21 இடங்களிலும் ஐக்கிய ஜனதா தளம் 20 இடங்களிலும் திரிணமூல் காங்கிரஸ் 19 இடங்களிலும் திமுக 18 இடங்களிலும் சுயேச்சைகள் 9 இடங்களிலும் வென்றன.

*காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மன்மோகன் சிங் 2-ஆவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றாா்.

*ரூ.846.67 கோடி செலவில் நடத்தி முடிக்கப்பட்ட இத்தோ்தலில், பிரதி வாக்காளருக்கான செலவு ரூ.12-ஆக குறைந்தது.

*1980 தோ்தலுக்குப் பிறகு, மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டு பட்டியிலன மற்றும் பழங்குடியின சமூக பிரநிதிகளுக்கான தனித் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

தொகுப்பு: மா.பிரவின்குமாா்