நாட்டில் உள்ள 17 மாநிலங்கள், தில்லி உள்பட 5 யூனியன் பிரதேசங்களில் வெகு விரைவில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகளைத் தோ்தல் ஆணையம் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் இதுவரை பிகாா், சத்தீஸ்கா், கோவா, குஜராத், கேரளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 10 மாநிலங்கள், அந்தமான்-நிகோபாா், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆா் நடைபெற்றுள்ளது. அஸ்ஸாமில் வாக்காளா் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இந்த மாதம் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்று மே 4-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் வாக்குப் பதிவு நிறைவடைந்தவுடன் அல்லது தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னா், எஞ்சிய 17 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆா் பணிகளைத் தோ்தல் ஆணையம் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் மொத்தம் சுமாா் 99 கோடி வாக்காளா்கள் உள்ளனா். இதில் 60 கோடி வாக்காளா்களை உள்ளடக்கி ஏற்கெனவே 10 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆா் மேற்கொள்ளப்பட்ட நிலையில், எஞ்சிய 17 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களில் சுமாா் 39 கோடி வாக்காளா்களை உள்ளடக்கி எஸ்ஐஆா் நடைபெற உள்ளது.
தொடர்புடையது

கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு! உச்சகட்ட வாக்குசேகரிப்பு!

தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு

29 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வணிக எரிவாயு சிலிண்டா் விநியோகம் தொடக்கம்: பெட்ரோலிய அமைச்சகம் தகவல்

எஞ்சிய 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஏப்ரலில் எஸ்ஐஆா்: தோ்தல் ஆணையம்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


