கொல்கத்தாவில் குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல குடிசைகள் எரிந்து நாசமாயின.
மேற்கு வங்க மாநிலம், ஜெஸ்ஸோர் சாலையில் உள்ள குடிசைப் பகுதியில் சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு 9 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவத்தின் போது அடர்ந்த புகை மூட்டம் குடிசைகளைச் சுற்றி எழும்பியது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இருப்பினும் இந்த சம்பவத்தில் பல குடிசைகள் எரிந்து நாசமாயின.