கொல்கத்தா: குடிசைப் பகுதியில் பயங்கர தீ விபத்து

கொல்கத்தா: குடிசைப் பகுதியில் பயங்கர தீ விபத்து

கொல்கத்தாவில் குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல குடிசைகள் எரிந்து நாசமாயின.

மேற்கு வங்க மாநிலம், ஜெஸ்ஸோர் சாலையில் உள்ள குடிசைப் பகுதியில் சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு 9 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தின் போது அடர்ந்த புகை மூட்டம் குடிசைகளைச் சுற்றி எழும்பியது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இருப்பினும் இந்த சம்பவத்தில் பல குடிசைகள் எரிந்து நாசமாயின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com