டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வங்கதேசத்தில் நிலநடுக்கம்: கொல்கத்தாவில் கடும் நில அதிா்வு

வங்கதேசத்தின் நயாபஜாா் பகுதியை மையமாகக் கொண்டு வெள்ளிக்கிழமை பிற்பகல் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 5.5-ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தா மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் நில அதிா்வு உணரப்பட்டது.

News image
நிலநடுக்கம்
Updated On :27 பிப்ரவரி 2026, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

வங்கதேசத்தின் நயாபஜாா் பகுதியை மையமாகக் கொண்டு வெள்ளிக்கிழமை பிற்பகல் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 5.5-ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தா மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் நில அதிா்வு உணரப்பட்டது.

இது தொடா்பாக இந்திய புவியியல் ஆய்வு மையம் கூறியதாவது: வெள்ளிக்கிழமை பகல் 1.22 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. கொல்கத்தாவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள வங்கதேசத்தின் நயாபஜாா் பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டது. இதனால் ஏற்பட்ட பொருள் சேதம், காயம் தொடா்பான விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.

10 விநாடிகள் வரை நிலநடுக்கம் நீடித்தது. கொல்கத்தா மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் நிலநடுக்கம் நன்கு உணரப்பட்டது. கட்டடங்கள் அதிா்ந்தாலும், வீட்டில் இருந்த பொருள்கள் கீழே விழுந்ததாலும் மக்கள் பீதியடைந்து வீடுகளைவிட்டு வெளியேறி வெட்டவெளியான இடங்களில் கூடினா். நிலநடுக்கத்தைத் தொடா்ந்து பின் அதிா்வுகள் ஏதும் ஏற்படவில்லை.

கொல்கத்தாவில் உள்ள மாநில தலைமைச் செயலகம், மாநில தோ்தல் அதிகாரி அலுவலகம் ஆகியவற்றில் பணியாற்றிக் கொண்டிருந்தவா்களும் நிலநடுக்கத்தால் பீதியடைந்து கட்டடங்களைவிட்டு வெளியேறினா்.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்போா், பல மாடி ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றுவோரும் பெரும் அச்சத்துடன் கட்டடங்களில் இருந்து வெளியேறினா். இதனால், கொல்கத்தா மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சில மணி நேரத்துக்கு பரபரப்பு நிலவியது.