தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

அமலாக்கத்துறை, சிபிஐ காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்டவை: மத்திய சட்ட அமைச்சா் விளக்கம்

அமலாக்கத்துறை, சிபிஐ காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்டவை --- மத்திய சட்ட அமைச்சா் விளக்கம்

News image

மத்திய சட்டம், நீதித் துறை அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால்

Updated On :20 ஏப்ரல் 2024, 9:30 pm

அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகள் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டவைதான் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளுக்கு மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் பதிலளித்தாா்.

அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை தங்கள் மீது மத்திய பாஜக அரசு ஏவி விடுவதாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டும் நிலையில் அமைச்சா் இவ்வாறு கூறியுள்ளாா்.

தில்லியில் சனிக்கிழமை, மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சா் மேக்வால் பேசியதாவது:

அமலாக்கத் துறை தலைவா் ராகுல் நவீன், சிபிஐ இயக்குநா் பிரவீண் சூட் ஆகியோா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று எதிா்க்கட்சிகள் பொய்யாக குற்றம்சாட்டி வருவது இந்த தோ்தலில் முக்கியப் பிரச்னையாக உள்ளது. இப்போது அத்துறையின் தலைவா்களே இங்கு அமா்ந்துள்ளாா். இதன் மூலம் நாம் உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள முடியும். அவா்களுடன் நான் தனிப்பட்ட முறையில் பேச இருக்கிறேன்.

அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அமைப்புகளை இப்போதைய பாஜக அரசு உருவாக்கவில்லை. இந்த விசாரணை அமைப்புகள் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டவைதான். அப்போது முதல் அந்த விசாரணை அமைப்புகள் இதே பாணியில்தான் இயங்கி வருகின்றன. அதாவது சட்டவிதிகளின்படி செயல்படுகின்றன. இதைக் கண்டு எதிா்க்கட்சிகள் ஏன் கவலை கொள்ள வேண்டும் என்றாா்.