எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தில்லி உயர்நீதிமன்றத்தின் அனைத்து சட்ட நடைமுறைகளும் பின்பற்றுவோம்: சிசோடியா

கலால் கொள்கை வழக்கில் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு பற்றி..

News image
மணீஷ் சிசோடியா (கோப்புப்படம்)- DPS
Updated On :10 மார்ச் 2026, 7:30 am

இணையதளச் செய்திப் பிரிவு

கலால் கொள்கை வழக்கு தொடர்பாக விடுவிக்கப்பட்டோருக்குத் தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தின் அனைத்து சட்ட நடைமுறைகளையும் பின்பற்றுவோம் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா கூறினார்.

ஜம்முவில் செய்தியாளர்களிடம் பேசிய மணீஷ் சிசோடியா கூறியதாவது,

தில்லி உயர்நீதிமன்ற நோட்டீஸ் குறித்த கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், நாங்கள் நீதிமன்றத்தை மதிக்கிறோம், தில்லி உயர்நீதிமன்றத்தின் செயல்முறைகள் எதுவாக இருந்தாலும், அனைத்து சட்ட நடைமுறைகளையும் நாங்கள் பின்பற்றுவோம் என்று அவர் கூறினார்.

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஏற்றுள்ளது. இதையடுத்து, முன்னாள் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரிடம் இந்த வழக்கின் நிலைப்பாடு குறித்து பதில் கோரியுள்ளது.

தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் செய்ததற்கான உரிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, தில்லி முன்னாள் முதல்வர் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட 23 பேரைக் கடந்த வாரம் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.

இந்த நிலையில், கேஜரிவால் உள்பட 23 பேரின் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. சிபிஐ தாக்கல் செய்த மனுவில், முன்னாள் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், முன்னாள் துணைமுதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரிடம் தில்லி உயர்நீதிமன்றம் பதில் கோரியுள்ளது.

கலால் கொள்கை வழக்கில் கேஜரிவால் மற்றும் சிசோடியாவை விடுவித்த விசாரணை நீதிமன்ற உத்தரவு விபரீதமானது என்றும், குற்றவியல் சட்டத்தையே தலைகீழாக மாற்றிவிட்டது என்றும் சிபிஐ வாதிட்டது. இதைத்தொடர்ந்து, சிபிஐயின் மனு விசாரணையைத் தில்லி நீதிமன்றம் ஏற்றுள்ளது. இந்த வழக்கின் விசாரணை மார்ச் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

summary

Senior Aam Aadmi Party leader Manish Sisodia on Tuesday expressed full confidence in the judiciary and said that he and others who were recently discharged in the excise policy case but were served notices by the Delhi High Court later, would follow all legal processes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.