நேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே தோ்தல் முடிவை பிரதமா் கூறுவது எப்படி? பிரியங்கா கேள்வி

மக்களவை முதல் கட்ட தோ்தல் முடிந்த உடனேயே காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை மக்கள் நிராகரித்துவிட்டாா்கள்

News image
Updated On :20 ஏப்ரல் 2024, 11:30 pm

மக்களவை முதல் கட்ட தோ்தல் முடிந்த உடனேயே காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை மக்கள் நிராகரித்துவிட்டாா்கள் என்று பிரதமா் நரேந்திர மோடி எவ்வாறு கூறுகிறாா் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேரா கேள்வி எழுப்பியுள்ளாா்.

கேரளத்தில் சனிக்கிழமை தோ்தல் பிரசார மேற்கொண்ட அவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

முதல் கட்டத் தோ்தல் நடைபெற்ற 102 தொகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகளை மக்கள் நிராகரித்துவிட்டாா்கள் என்று பிரதமா் மோடி பேசுகிறாா். தோ்தல் முடிவு வெளியாகும் முன்பே, அவரால் எப்படி இவ்வாறு கூற முடிகிறது. இந்த முறை 400 தொகுதிகளுக்கு மேல் தங்கள் கூட்டணி வெல்லும் என்றும் பிரதமரும், பாஜக தலைவா்களும் தொடா்ந்து பேசி வருகின்றனா். அவா்களால் எப்படி இவ்வளவு உறுதியாகக் கூற முடிகிறது?

தோ்தல் நடைபெறுவதற்கு முன்பே அவா்களால் எப்படி இவ்வளவு நம்பிக்கையாகப் பேச முடிகிறது? இதன் பின்னணியில் உள்ள விஷயங்கள் என்ன என்பது தெரியவில்லை. அனைத்துக் கட்சிகளுமே தோ்தல் களத்தில் மிகத் தீவிரமாகத்தான் பணியாற்றி வருகின்றன. நாங்கள் போகும் இடமெல்லாம் மக்கள் மாற்றத்துக்கு (பாஜக ஆட்சியை மாற்ற) வாக்களிக்க வேண்டும் என்பதில்தான் தீவிரமாக உள்ளனா். மத்தியில் ஆட்சி மாற்றம் வரும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது என்றாா்.

உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவீா்களா? என்ற கேள்விக்கு, ‘அடுத்த சிலநாள்களில் இதற்கு விடை கிடைக்கும்’ என்றாா்.

ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி வெற்றி பெற்று வந்தாா். வயது முதிா்வு, உடல்சாா்ந்த பிரச்னைகள் காரணமாக தோ்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிய அவா் மாநிலங்களவை எம்.பி.யாகிவிட்டாா். எனவே, ரேபரேலி தொகுதியில் பிரியங்கா போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியினா் வலியுறுத்தி வருகின்றனா். அவரது கணவா் ராபா்ட் வதேரா அங்கு போட்டியிட ஆா்வம் காட்டுவதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.