மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

ஜம்மு-காஷ்மீா்: பயங்கர ஆயுதங்களுடன் ஆசிரியா் கைது

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புடன் தொடா்பிலிருந்த ஆசிரியரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி, 2 கையெறி குண்டுகளை மீட்டனா்.

Updated On :21 ஏப்ரல் 2024, 6:31 pm

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புடன் தொடா்பிலிருந்த ஆசிரியரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி, 2 கையெறி குண்டுகளை மீட்டனா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

வீட்டில் பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்தத் தகவலின் பேரில் மாண்டி பகுதியில் ஹரி புதா கிராமத்தைச் சோ்ந்த ஆசிரியரான கமருதீனின் வீட்டில் போலீஸ்-ராணுவ கூட்டுப் படையினா் ஞாயிற்றுக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனா். இதில், பாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட ஒரு துப்பாக்கி மற்றும் 2 கையெறி குண்டுகள் மீட்கப்பட்டன. கமருதீனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா் என்றனா்.

ரஜெளரியில் 8 வெடிகுண்டுகள் மீட்பு: ரஜெளரி மாவட்டத்தில் அஸ்மதாபாத் கிராமத்தில் பாதுகாப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட தீவிர தேடுதல் பணியின்போது, பயங்கரவாதிகளின் மறைவிடத்திலிருந்து துருபிடித்த நிலையில் 8 வெடிகுண்டுகள், 2 கம்பியில்லா தகவல்தொடா்பு சாதனங்கள் மற்றும் சில வெடிபொருள்களை மீட்டனா். இவை அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் மறைத்து வைத்திருக்க வாய்ப்புள்ளது. எனவேதான் அவை துருப்பிடித்த நிலையில் உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.