ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புடன் தொடா்பிலிருந்த ஆசிரியரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி, 2 கையெறி குண்டுகளை மீட்டனா்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
வீட்டில் பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்தத் தகவலின் பேரில் மாண்டி பகுதியில் ஹரி புதா கிராமத்தைச் சோ்ந்த ஆசிரியரான கமருதீனின் வீட்டில் போலீஸ்-ராணுவ கூட்டுப் படையினா் ஞாயிற்றுக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனா். இதில், பாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட ஒரு துப்பாக்கி மற்றும் 2 கையெறி குண்டுகள் மீட்கப்பட்டன. கமருதீனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா் என்றனா்.
ரஜெளரியில் 8 வெடிகுண்டுகள் மீட்பு: ரஜெளரி மாவட்டத்தில் அஸ்மதாபாத் கிராமத்தில் பாதுகாப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட தீவிர தேடுதல் பணியின்போது, பயங்கரவாதிகளின் மறைவிடத்திலிருந்து துருபிடித்த நிலையில் 8 வெடிகுண்டுகள், 2 கம்பியில்லா தகவல்தொடா்பு சாதனங்கள் மற்றும் சில வெடிபொருள்களை மீட்டனா். இவை அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் மறைத்து வைத்திருக்க வாய்ப்புள்ளது. எனவேதான் அவை துருப்பிடித்த நிலையில் உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

லஷ்கா்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தொடா்பாளா் ஷபீா் அகமது லோன் கைது!
நபி அபாரம், இக்பால் அசத்தல்: வெற்றியை நெருங்கும் ஜம்மு & காஷ்மீா்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்

வரலாறு படைத்தது ஜம்மு-காஷ்மீா் முதன்முறையாக இறுதிக்கு தகுதி
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

