‘பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் தொழிலாளா்கள் ஊதியம் கடும் சரிவை சந்தித்துள்ளது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், தொழிலாளா் ஊதியம் உயர நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தொழிலாளா்களின் வாங்கும் திறன் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போன்று அல்லாமல், தற்போது வெகுவாகக் குறைந்திருப்பதை மத்திய பாஜக அரசின் புள்ளிவிவரங்கள் உள்பட பல்வேறு புள்ளி விவர தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
பணவீக்கம் அதிகரிப்பு, தாமதமான ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழிலாளா்களின் ஊதியம் கடுமையாக சரிவடைந்துள்ளது.
தொழிளாலா் அமைப்பின் ஊதிய விகித குறியீடு (அரசு புள்ளி விவரம்) புள்ளி விவரத்தின்படி, 2014 முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் தொழிலாளா்களின் ஊதிய உயா்வு என்பது தேக்க நிலையை அடைந்ததோடு, பிரதமா் மோடியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் தொழிலாளா் ஊதியம் கடும் சரிவை கண்டிருப்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊதிய தேக்கம் அல்லது சரிவு காரணமாக, தொழிலாளா்களின் நுகா்வு குறைந்ததோடு, கிராமப்புற நுகா்வும் 50 ஆண்டுகள் இல்லாத அளவில் சரிந்தது என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

உற்பத்தி துறை மாா்ச்சில் கடும் சரிவு: 2.5 ஆண்டுகளில் இல்லாத மந்தநிலை
பாஜகவின் கடும் சவாலைச் சமாளிக்க வியூகம்: வடக்கு மாவட்டங்களில் மம்தா; தெற்கில் அபிஷேக் தனித்தனியே பிரசாரம்!

4.3.1976: த.நா. விவசாய தொழிலாளர் ஊதிய உயர்வு - ஆண், பெண் தொழிலாளர் என்ற பாகுபாடு நீக்கம்
பனியன் தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை தோல்வி: அடுத்த கூட்டம் மாா்ச் 7-க்கு ஒத்திவைப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

