மேற்கு வங்கத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை: ராஜ்நாத் சிங்

மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டினார்.
ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு மால்டா பகுதியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பொதுக்கூட்ட மேடையில் பேசிய அவர், மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை.

திரிணமூல் ஆட்சி மேற்கு வங்கத்தில் ஊழல் நிறைந்ததாக உள்ளது.

மாநிலத்தின் அனைத்து அரசு ஒப்பந்தங்களும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்படுகிறது. சட்டம் - ஒழுங்கு பிரச்னையை சரி செய்யாமல் எந்த திட்டங்களையும் நிறைவேற்ற முடியாது எனக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com