குஜராத் மாநிலம் சூரத் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் போட்டியின்றி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
காங்கிரஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்திருந்த நீலேஷ் கும்பானியின் மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் மக்களவைத் தேர்தல் முடியும் முன்பே முதல் மக்களவை உறுப்பினரை பெற்ற கட்சியாக பாஜக மாறியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக 8 பேர் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. இதில் 7 பேர் சுயேச்சை வேட்பாளர்கள். பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றார்.
காங்கிரஸ் சார்பில் நீலேஷ் கும்பானி மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரின் மனுவை ஏற்க கடந்த ஞாயிற்றுக்கிழமை மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் சார்பில் சுரேஷ் பத்சலா என்பவர் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், அதனை ஏற்கவும் தேர்தல் அலுவலர் மறுப்பு தெரிவித்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் முரண்பாடுகள் இருந்ததாக அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கடைசிநாள் முடிவடைந்த நிலையில், தற்போது சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் எம்.பி.யாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
માનનà«àª¯ પà«àª°àª§àª¾àª¨àª®àªàª¤à«àª°à« શà«àª°à« નરà«àª¨à«àª¦à«àª°àªàª¾àª મà«àª¦à« સાહà«àª¬àª¨à« સà«àª°àª¤à« પહà«àª²à«àª àªàª®àª³ àªàª°à«àªªàª£ àªàª°à«àª¯à«àª !!
— C R Paatil (Modi Ka Parivar) (@CRPaatil) April 22, 2024
સà«àª°àª¤ લà«àªàª¸àªàª¾ બà«àª àªàª¨àª¾ àªàª®à«àª¦àªµàª¾àª° શà«àª°à« મà«àªà«àª¶àªàª¾àª દલાલનૠબિનહરà«àª« àªà«àªàªàª¾àªµàªµàª¾ બદલ àªà«àª¬ àªà«àª¬ àªàªàª¿àª¨àªàª¦àª¨ àªàª¨à« શà«àªà«àªà«àªàª¾àª પાઠવà«àª¯àª¾ !! #PhirEKBarModiSarkar#AbkiBaar400Paar pic.twitter.com/w87WSrla5s
அவருக்கு குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி மாநகராட்சியின் நிலைக் குழு தலைவராக பாஜகவின் சத்யா ஷா்மா மீண்டும் தோ்வு

வெள்ளத்தில் மிதக்கும் சூரத்!
கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்... மாநிலங்களவை தேர்தலில் பாஜக ஆதரவு சுயேச்சை வேட்பாளர் வெற்றி!

ம.பி.யில் போட்டியின்றி 3 மாநிலங்களவை இடங்களையும் கைப்பற்றிய பாஜக!
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager



