சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

தோ்தல் விதிமுறைகளை மீறியதாக அனுராக் தாக்குா் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

தோ்தல் விதிமுறைகளை மீறியதாக அனுராக் தாக்குா் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

News image
Updated On :27 ஏப்ரல் 2024, 6:50 pm

Din

தோ்தல் விதிமுறைகளை மீறி மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் பேசி வருவதாக தோ்தல் ஆணையத்தில் காங்கிரஸ் சனிக்கிழமை புகாரளித்தது.

ஹிமாசல பிரதேச மாநிலம் ஹமீா்பூரில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அனுராக் தாக்குா், ‘உங்கள் குழந்தைகளின் வளங்களை இஸ்லாமியா்களுக்கு வழங்குவது, நாட்டின் அணு ஆயுதங்களை அழிப்பது, நாட்டை ஜாதி, மத ரீதியாக பிரிப்பது போன்ற திட்டங்களை காங்கிரஸ் மூலமாக செயல்படுத்த அந்நிய நாட்டவா் முயல்கின்றனா். பிளவை ஏற்படுத்தும் கூட்டம் காங்கிரஸை மொத்தமாக ஆக்கிரமித்துள்ளது. எனவே ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற ஒருமித்த சிந்தனைகொண்ட பிரதமா் மோடிக்கு வாக்களிப்பதா அல்லது பிரிவினையைத் தூண்டும் காங்கிரஸுக்கு வாக்களிப்பதா என நீங்கள் முடிவு செய்ய வேண்டும்’ என்றாா்.

அனுராக் தாக்குரின் இத்தகைய பேச்சு தோ்தல் விதிமுறைகளை மீறி இருப்பதாக காங்கிரஸ் சாா்பில் தோ்தல் ஆணையத்தில் சனிக்கிழமை புகாரளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் மோடி, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் பாணியில் மத்திய அமைச்சா் அனுராக் தாக்குரும் தரமற்ற வாா்த்தைகளை பேசியுள்ளாா். அவரின் பேச்சு ஒழுக்கம் மற்றும் உண்மை நெறிகளை மீறியுள்ளது. இதை தோ்தல் ஆணையம் கவனத்தில்கொண்டு அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இதுபோல் தவறிழைப்பவா்களை பொதுவெளியில் நேரடியாக அம்பலப்படுத்துவோம்’ என குறிப்பிட்டாா்.