இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வயநாடு நிலச்சரிவு: மோடியிடம் அறிக்கை சமர்ப்பிப்பு!

மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் அறிக்கையை வழங்கினார்.

News image
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அறிக்கை அளித்த அமைச்சர் ஜார்ஜ் குரியன்- ANI
Updated On :4 ஆகஸ்ட் 2024, 11:33 am

DIN

வயநாடு நிலச்சரிவில் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

கேரளத்தைச் சேர்ந்தவரும், சிறுபான்மையினர் நலத் துறைக்கான மத்திய இணை அமைச்சருமான ஜார்ஜ் குரியன், பிரதமர் மோடியை, அவரின் இல்லத்தில் சந்தித்து அறிக்கையை வழங்கினார்.

கேரளத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் மத்திய மீட்புப் படை, ராணுவ வீரர்கள், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், காவல் துறையினர் உள்ளிட்டோரின் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து மோடிக்குத் தெரிவித்தார்.

வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட மலைக் கிராமங்களில் கடந்த 30ஆம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் ஏராளமான பொதுமக்கள் நிலத்தில் புதைந்தனர். வீடுகளும் பாதிக்கப்பட்டன.

மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் பணிகளில் மத்திய படைகளுடன் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து 6வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நிலத்தில் சிக்கி இதுவரை 357 பேர் உயிரிழந்திருப்பதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 25 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 150க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மோப்ப நாய்கள், ரேடார், வாக்கி டாக்கி ஆகியவற்றின் உதவியுடன் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டார். மேலும், நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்பு, மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் அறிக்கையாக சமர்ப்பித்தார்.

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என பலதரப்பில் இருந்து கோரிக்கை எழுந்து வரும் நிலையில், மோடியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.