மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வயநாட்டில் 100 பேருக்கு நிலம் வழங்கும் பாபி செம்மனூர்!

நிலச்சரிவில் வீடுகளை இழந்தோர்க்கு நிலம் வழங்கவிருப்பதாக கேரள தொழிலதிபர் பாபி செம்மனூர் அறிவிப்பு

News image
பாபி செம்மனூர் (கோப்புப் படம்)
Updated On :5 ஆகஸ்ட் 2024, 1:12 pm

DIN

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது சொந்த நிலத்தைத் தருவதாக தொழிலதிபர் பாபி செம்மனூர் கூறியுள்ளார்.

கேரளத்தின் திருச்சூரைச் சேர்ந்த பாபி செம்மனூர் ஜூவல்லர்ஸின் நிறுவனர் தொழிலதிபர் பாபி செம்மனூர், கேரளத்தின் வயநாட்டில் நிலச்சரிவால் வீடுகளை இழந்த 100 பேருக்கு புதிய வீடுகளைக் கட்டிக்கொள்ள, தனது சொந்த நிலத்தைத் தருவதாக அறிவித்துள்ளார்.

நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த பட்டியல் வெளியான பிறகு, அவர்களில் 100 பேருக்கு நிலம் அளிக்கப்படும்; வழங்கப்படும் நிலங்களில் வீடு கட்டுவதற்கும் உதவிகள் செய்யப்படும். தற்போது நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் முடிவுற்ற பிறகே கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் பலத்த மழையைத் தொடா்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இத்துயர சம்பவத்தில் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்மலை ஆகிய மலைக் கிராமங்களில் நூற்றுக்கணக்கானோா் உயிரிழந்ததுடன் பலா் வீடுகளை இழந்து நிற்கின்றனா்.

நிலச்சரிவு நேரிட்ட இடங்களில் மீட்புப் பணிகளும், நிவாரணப் பணிகளும் ஒருங்கே நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து ஏழாவது நாளாக திங்கள்கிழமையும் மீட்புப்பணிகள் தொடர்ந்து வருகின்றன.

தீயணைப்பு வீரர்கள், தன்னார்வலர்கள் உள்பட 1,500 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவம், கடற்படை, வனத்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை, காவல்துறை என பல்வேறு துறை வீரர்கள் சுமார் ஆறு பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.