வங்கதேசத்தில் சலிமுல்லா கான் மற்றும் ஆசிஃப் நஸ்ருல் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, நாட்டை விட்டு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்டது. இதனை அந்நாட்டு ராணுவ தளபதி வாக்கர் - உஸ் - ஸமான் உறுதிப்படுத்தினார்.
இதனிடையே வங்கதேசத்தின் இடைக்கால அரசு, சலிமுல்லா கான் மற்றும் ஆசிஃப் நஸ்ருல் ஆகியோர் தலைமையில் செயல்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சலிமுல்லா கான் என்பவர் வங்கதேச எழுத்தாளர், ஆசிரியர். ஆசிஃப் நஸ்ருல் என்பவர் டாக்கா சட்டப் பல்கலைக் கழக பேராசிரியர்.
வங்கதேசத்தில் நிலவிவரும் வன்முறையால், ஹேக் ஹசீனாவின் 15 ஆண்டுகால பிரதமர் பதவி முடிவுக்கு முற்று பெற்றது.
பாகிஸ்தானுக்கு எதிரான போரில், வங்கதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.
இந்த இட ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக கூறி கடந்த மாதம் அந்நாட்டு மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையில், 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. எனினும், போராட்டக்காரர்களை தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்ட ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
போராட்டக்காரர்கள் தீவிரமாக இருந்ததாலும் கலவரம் பெரிதானதாலும், ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு வெளிநாடுக்குத் தப்பினார். ராணுவ ஹெலிகாப்டர் மூலம் இந்தியா வந்த அவர், அங்கிருந்து லண்டன் செல்லத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்நிலையில், வங்கதேசத்தில் சலிமுல்லா கான் மற்றும் ஆசிஃப் நஸ்ருல் தலைமையில் இடைக்கால அரசு அமைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் வஹாப் மியா, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி இக்பால் கரீம் பூஹியான், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சையத் உத்தின் ஆகியோர் பேரும் இடைக்கால பிரதமர் பெயருக்கான பரிந்துரைப் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி

விஜய் தலைமையில் ஆட்சியமைக்க அனுமதி: நெல்லை தவெகவினா் ஆளுநருக்கு கடிதம்

அரசு ஊழியா் சங்க அமைப்பு தின விழா
அரசியல் உள்நோக்கம் கொண்ட 1,500 நியமனங்கள் உடனடி ரத்து: நேபாள அரசு அவசர உத்தரவு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை



