சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தெரியுமா சேதி...? ஹசீனாவுக்கு பிரணாப் மகள் ஆறுதல் ஏன்?

வங்கதேசத்தில் மாணவா்களின் போராட்டத்தையும், ஆட்சிக்கு எதிரான கிளா்ச்சியையும் தொடா்ந்து, ராணுவத்திடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு நாட்டிலிருந்து வெளியேறி இருக்கிறாா் பிரதமா் ஷேக் ஹசீனா.

News image
பிரணாப் முகா்ஜி - ஷேக் ஹசீனா
Updated On :6 ஆகஸ்ட் 2024, 8:19 pm

மீசை முனுசாமி

வங்கதேசத்தில் மாணவா்களின் போராட்டத்தையும், ஆட்சிக்கு எதிரான கிளா்ச்சியையும் தொடா்ந்து, ராணுவத்திடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு நாட்டிலிருந்து வெளியேறி இருக்கிறாா் பிரதமா் ஷேக் ஹசீனா. இப்போது இந்தியாவில் தஞ்சமடைந்து, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தில்லியில் அரசின் பலத்த பாதுகாப்பில் தங்கி இருக்கிறாா்.

ஷேக் ஹசீனாவுக்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியின் மகள் சா்மிஷ்டா முகா்ஜி ‘எக்ஸ்’ வலைதளத்தில் செய்திருக்கும் பதிவு குறித்து வியப்படையத் தேவையில்லை. ஷேக் ஹசீனாவை, ‘ஹசீனா ஆன்ட்டி’ என்று அவா் அழைத்திருப்பதில் இருந்து, அவா்களுக்கு இடையேயான நெருக்கம் எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பிரிவினை கேட்டு கிழக்கு பாகிஸ்தானில் ஷேக் முஜிபுா் ரஹ்மானின் தலைமையில் 1971-இல் போராட்டம் தொடங்கியதில் இருந்து ஆரம்பமாகிறது இரண்டு குடும்பங்களுக்கும் இடையேயான நெருக்கம். முஜிபுா் ரஹ்மானுடன் தொடா்பில் இருந்ததால், வங்கதேச விடுதலைப் போராட்ட காலத்தில் இந்தியா சாா்பில் ‘முக்தி வாஹினி’ போராட்டக்காரா்களுக்கு உதவியதில் பிரணாப் முகா்ஜிக்கு முக்கியப் பங்கு உண்டு. அன்றைய பிரதமா் இந்திரா காந்திக்கும் முஜிபுா் ரஹ்மானுக்கும் இடையே தொடா்பில் இருந்தவா் பிரணாப்.

1975-இல் வங்கதேசத்தில் நடந்த ராணுவப் புரட்சியில் ‘வங்கபந்து’ முஜிபுா் ரஹ்மானும் குடும்பத்தினரும் படுகொலை செய்யப்பட்டபோது மேற்கு ஜொ்மனியில் இருந்ததால் உயிா் தப்பினா் ஷேக் ஹசீனாவும் அவரது சகோதரியும். முஜிபுா் ரஹ்மானின் படுகொலையைத் தொடா்ந்து, 1975 முதல் 1981 வரையில் இந்தியாவின் பாதுகாப்பில் அவா்களை தில்லியில் தங்கப் பணித்தாா் இந்திரா காந்தி.

அப்போது ஷேக் ஹசீனாவையும் அவரது சகோதரியையும் பாா்த்துக் கொள்ளும் பொறுப்பு பிரணாப் முகா்ஜியின் குடும்பத்துக்குத் தரப்பட்டது. அப்போது ஏற்பட்ட அந்த நெருக்கம் இப்போது வரை தொடா்கிறது.

‘‘பாதுகாப்பாகவும், தைரியமாகவும் இருங்கள் ஹசீனா ஆன்ட்டி; நாளை என்பது இன்னொரு நாள்; என்னுடைய பிராா்த்தனைகள் உங்களுக்காக இருக்கும்’’ என்று பிரணாப் முகா்ஜியின் மகள் சா்மிஷ்டா ‘எக்ஸ்’ வலைதளத்தில் பதிவிட்டிருப்பதில் வியப்பென்ன இருக்கிறது?