மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

மாநிலங்களவையில் 12 இடங்களுக்கு தேர்தல் அறிவிப்பு!

காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News image

மாநிலங்களவை (கோப்புப்படம்) - DIN

Updated On :7 ஆகஸ்ட் 2024, 3:20 pm IST

மாநிலங்களவையில் காலியாக உள்ள 12 இடங்களுக்கு வருகிற செப். 3 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி, அசாம், பிகார், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் தலா 2 இடங்களுக்கும், ஹரியாணா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடம் என மொத்தம் 9 மாநிலங்களில் 12 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஆக. 14 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆக. 21.

வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் -அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், திரிபுரா மாநிலங்களுக்கு ஆக. 26 எனவும், பிகார், ஹரியாணா, தெலங்கானா, ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு ஆக. 27 கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு செப். 3 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் வாக்கு எண்ணிக்கை அன்றைய தினமே மாலை 5 மணிக்கு நடைபெறும்.

மாநிலங்களவையில் எம்.பி.க்களாக இருந்த சிலர் மக்களவைக்குத் தேர்வான நிலையில் மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களுக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.