கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் ஆக.20 வரை நீட்டிப்பு!
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 20 வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடந்த 21ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. அதன்பின்னர் மக்களவைத் தேர்தலுக்காக இடைக்கால ஜாமீன் வழங்கிய நிலையில், மீண்டும் கேஜரிவால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, கலால் வழக்கில் அமலாத்துறையால் கைது செய்யப்பட்ட முதல்வர் கேஜரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும் இந்த வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) கைது செய்ததால் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவர் சிபிஐ வழக்கில் நீதிமன்றக் காவலில் இருந்துவருகிறார்.
இந்த நிலையில், கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், திகார் சிறையில் காணொலிக் காட்சி வாயிலாக தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, இந்த வழக்கில் கேஜரிவாலுக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப் பத்திரிகையை ஆகஸ்ட் 12-ம் தேதி நீதிமன்றம் பரிசீலிக்கும் என்றார்.
இதையடுத்து கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 20 வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.