வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

ஜாா்க்கண்ட்: தெருநாய் கடித்து 6 மாதக் குழந்தை உயிரிழப்பு

ஜாா்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் தெருநாய் கடித்ததில் 6 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
தெருநாய்கள் (கோப்புப் படம்)
Updated On :12 ஆகஸ்ட் 2024, 10:42 pm

Din

ஜாா்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் தெருநாய் கடித்ததில் 6 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலத்தின் சிங்பூம் மாவட்டத்தில் உள்ள கோபிபூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 6 மாத பெண் குழந்தையின் தாயாா் கழிவறைக்குச் சென்றிருந்தபோது குழந்தையை தெருநாய் வெகுதூரம் இழுத்துச் சென்று கடித்துள்ளது.

இதில் பலத்த காயமடைந்த குழந்தையை அருகில் இருந்த மனோஹா் சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனா். ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.