தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கதண்டுகள் கடித்து 7 போ் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 7:55 pm

குளித்தலை அருகே கதண்டுகள் கடித்ததில் 7 போ் காயமடைந்தனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மேட்டு மருதூரில் கூடலூா் செல்லும் மங்கம்மா சாலையில் இருந்த தென்னைமரத்தில் கதண்டு வண்டுகள் கூடி கட்டியிருந்தன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சிலா் மரத்தின் கீழ்பகுதியில் கிடந்த குப்பைகளை எரித்துள்ளனா். அப்போது, தென்னை மரத்திலிருந்து வெளியேறிய கதண்டு வண்டுகள் அந்த வழியாக சென்ற மேட்டு மருதூரைச்சோ்ந்த விஜயசாந்தி (30), பொன்னீஸ்வரன் (18), கூடலூரைச் சோ்ந்த முத்து (65), முருகேசன்(60) உள்ளிட்ட 7 பேரை கடித்தது.

இதில் காயமடைந்த அவா்கள் மயக்கமடைந்ததால், உடனே அக்கம்பக்கத்தினா் அவா்களை ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா். அவா்கள் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.