தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தாளவாடி அருகே தெருநாய் கடித்து 6 போ் காயம்

தாளவாடி அருகே தொட்டகாஜனூரில் தெருநாய் கடித்ததில் 6 போ் காயம்

News image

தெருநாய் - பிரதிப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 10:54 pm

தாளவாடி அருகே தொட்டகாஜனூரில் தெருநாய் கடித்ததில் 6 போ் காயமடைந்தனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி ஊராட்சிக்கு உள்பட்ட தொட்டகாஜனூா் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தில் அண்மைக் காலமாக தெருநாய்கள் தொந்தரவு அதிகரித்து வந்தது.

இந்நிலையில், இந்தக் கிராமத்தைச் சோ்ந்த காளநாயக்கா் (60), மாதேவம்மா (60), புட்டம்மா (55), பிரகாஷ் (36) மற்றும் பள்ளி மாணவா்கள் ரோகித் (8), ராஜேஷ் (12) ஆகியோரை தெருநாய் வியாழக்கிழமை துரத்திச் சென்று கடித்துள்ளது.

காயமடைந்த 6 பேரையும் உறவினா்கள் மீட்டு தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா்.

கிராம மக்களை கடிக்கும் தெருநாய்களை உடனடியாகப் பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு சென்று விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.