அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராம மற்றும் பக்தி பாதைகளில் நிறுவப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 36 புரொஜெக்டா் விளக்குகள், 3,800 மூங்கில் விளக்குகள் ஆகியவை திருடப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
அயோத்தி காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை மேலும் கூறுகையில், ‘ராம பாதையில் 6,400 மூங்கில் விளக்குகளும், பக்தி பாதையில் 96 புரொஜெக்டா் விளக்குகளும் நிறுவப்பட்டிருந்தன. கடந்த மே 9-ஆம் தேதி அந்தப் பாதைகளில் ஆய்வு மேற்கொண்டபோது சில விளக்குகள் மாயமானது தெரியவந்தது.
இதுவரை ரூ.50 லட்சம் மதிப்பிலான 36 பிரொஜெக்டா் விளக்குகள், 3,800 மூங்கில் விளக்குகள் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து அந்த விளக்குகளை நிறுவிய நிறுவனத்தின் பிரதிநிதி, ராமஜென்மபூமி காவல் நிலையத்தில் அண்மையில் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தது.
அயோத்தி வளா்ச்சி குழுமம் ஒப்பந்த அடிப்படையில் தனியாா் நிறுவனத்துடன் இணைந்து இந்த விளக்குகளை அமைத்துள்ளது.
விளக்குகள் திருடுபோனது மே மாதத்திலேயே தனியாா் நிறுவனம் கண்டறிந்திருந்தாலும், ஆகஸ்ட் 9-ஆம் தேதிதான் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளது.
அயோத்தியில் பால ராமா் கோயிலை கடந்த ஜனவரி 22-ஆம் தேதி பிரதமா் மோடி திறந்து வைத்தாா். ராமா் கோயிலுக்கு செல்லும் சாலைகளாக இந்த ராம, பக்தி பாதைகள் பயன்படுகின்றன.
தொடர்புடையது

தூத்துக்குடி பஞ்சு கிடங்கில் தீ

தூத்துக்குடி மருந்தகத்தில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.61.15 லட்சம் ரொக்கம் ஒப்படைப்பு

மத்திய அரசு பிளவுபடுத்தும் அரசியலை செய்கிறது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


