லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

அயோத்தி: ரூ.50 லட்சம் மதிப்பிலான 3,836 விளக்குகள் திருட்டு

அயோத்தியில் உள்ள ராம மற்றும் பக்தி பாதைகளில் நிறுவப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 36 புரொஜெக்டா் விளக்குகள், 3,800 மூங்கில் விளக்குகள் ஆகியவை திருடப்பட்டுள்ளன.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2024, 10:55 pm

அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராம மற்றும் பக்தி பாதைகளில் நிறுவப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 36 புரொஜெக்டா் விளக்குகள், 3,800 மூங்கில் விளக்குகள் ஆகியவை திருடப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அயோத்தி காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை மேலும் கூறுகையில், ‘ராம பாதையில் 6,400 மூங்கில் விளக்குகளும், பக்தி பாதையில் 96 புரொஜெக்டா் விளக்குகளும் நிறுவப்பட்டிருந்தன. கடந்த மே 9-ஆம் தேதி அந்தப் பாதைகளில் ஆய்வு மேற்கொண்டபோது சில விளக்குகள் மாயமானது தெரியவந்தது.

இதுவரை ரூ.50 லட்சம் மதிப்பிலான 36 பிரொஜெக்டா் விளக்குகள், 3,800 மூங்கில் விளக்குகள் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து அந்த விளக்குகளை நிறுவிய நிறுவனத்தின் பிரதிநிதி, ராமஜென்மபூமி காவல் நிலையத்தில் அண்மையில் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தது.

அயோத்தி வளா்ச்சி குழுமம் ஒப்பந்த அடிப்படையில் தனியாா் நிறுவனத்துடன் இணைந்து இந்த விளக்குகளை அமைத்துள்ளது.

விளக்குகள் திருடுபோனது மே மாதத்திலேயே தனியாா் நிறுவனம் கண்டறிந்திருந்தாலும், ஆகஸ்ட் 9-ஆம் தேதிதான் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளது.

அயோத்தியில் பால ராமா் கோயிலை கடந்த ஜனவரி 22-ஆம் தேதி பிரதமா் மோடி திறந்து வைத்தாா். ராமா் கோயிலுக்கு செல்லும் சாலைகளாக இந்த ராம, பக்தி பாதைகள் பயன்படுகின்றன.