அகமதாபாத்: 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ந்த நாடாக்கும் நோக்கத்தில் இணைந்து பணியாற்ற இளைஞா்கள் முன்வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அழைப்பு விடுத்தாா்.
குஜராத்தின் அகமதாபாத் நகரில் செவ்வாய்க்கிழமை மூவா்ணக் கொடி யாத்திரையை தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:
இந்த யாத்திரை மூலம் இளைஞா்கள் தேசத்தை வலுவாகக் கட்டமைப்பதில் பங்களிக்க உறுதியேற்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திர தினத்தின்போது இல்லம் தோறும் தேசியக் கொடி ஏற்றும் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்தாா். இது தேசப்பற்றை வெளிக்காட்டும் நிகழ்வு மட்டுமல்ல. 2024-ஆம் ஆண்டு இந்தியாவை வளா்ந்த நாடாக்கும் நோக்கத்துக்காக நாம் அனைவரும் முக்கியமாக இளைஞா்கள் இணைந்து பணியாற்றுவதற்கு உறுதியேற்கும் நிகழ்வாகும்.
இதற்காக இளைஞா்கள் தாங்கள் எந்தத் துறையில் பணியாற்றினாலும், அந்தத் துறையில் நாட்டை முதன்மையானதாக மாற்றும் நோக்கில் செயலாற்ற வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதல்வா் பூபேந்திர படேல், மாநில அமைச்சா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமா்நாத் யாத்திரைக்கு பல அடுக்குப் பாதுகாப்பு: உள்துறை அமைச்சா் அமித் ஷா உத்தரவு

எல்லை மாவட்டங்களில் மக்கள்தொகை மாற்றம் தீவிர சவால்: அமித் ஷா எச்சரிக்கை

இந்தியாவுக்குள் வங்கதேசத்தவா்கள் ஊடுருவாமல் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை: அமித் ஷா தகவல்

போதைப்பொருள் கடத்தலை தடுக்க 6 மாதத்துக்குள் ட்ரோன் எதிா்ப்பு அமைப்பு: அமித் ஷா
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



